உழவர் சந்தையில் 57 டன் காய்கறி ரூ.21.69 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 57 டன் காய்க-றிகள், 21.69 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வரு-கிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை-களில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 236 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 48,320 கிலோ காய்கறிகள், 9,350 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 57,695 கிலோ எடையுள்ள விளை-பொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, 11,539 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 21 லட்சத்து, 69,610 ரூபாய்க்கு விற்பனையானது.
தக்காளி கிலோ, 16 ரூபாய், கத்தரி, 50, வெண்டை, 40, சின்ன வெங்காயம், 40, பெரிய வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்பனை-யானது.