கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தப்பேட்டையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்காதாதால், முத்தாலம்மன் கோவில் குளக்கரை வழியாக செல்லும் கால்வாயியின் நீர்வழித்தட பாதையில் கொடி, கொடிகள், கோரைபுற்கள் வளர்ந்துள்ளன.

இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement