சமையல் காஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது பா.ஜ., அரசுக்கு மிகவும் பொருந்தும்.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.,வின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது.
தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












மேலும்
-
பீஹாரில் ராகுல் பாதயாத்திரை; காங்., கட்சியினர் மோதல்
-
ஆயாக்களுக்கு அவ்ளோ தான் கைவிரித்தார் அமைச்சர் மா.சு.,
-
தேக்கமடைந்த வீடுகள் விற்பனை
-
சுயசான்று முறையில் 2 மாடி வீடு கட்ட அனுமதி; வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
-
வக்ப் சட்ட மசோதாவை எதிர்ப்பது... சட்டவிரோதம்! எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ., பாய்ச்சல்
-
'காஸ் ஸ்டவ்' உதிரி பாக கிடங்கில் திருடியவர் கைது