விரைவில் வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா திட்டவட்டம்

4

புதுடில்லி: "இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், வங்க தேசத்தை பயங்கரவாத நாடாக மாற்றிவிட்டார். விரைவில் நாடு திரும்புவேன்" என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சபதம் விடுத்துள்ளார்.


@1brவங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியை கைப்பற்றியது. இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:
அல்லா என்னை ஒரு காரணத்திற்காகவே உயிருடன் வைத்திருந்தான், நீதி நிலைநாட்டப்படும்.
இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், வங்க தேசத்தை பயங்கரவாத நாடாக மாற்றிவிட்டார். எனது கட்சி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் நாடு திரும்புவேன்.


வங்கதேச மக்களை ஒருபோதும் நேசிக்காத முகமது யூனுஸ் அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகைகளை கடன் வாங்கி, அந்தப் பணத்தை வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழ பயன்படுத்தினார். அப்போது அவரது போலித்தனத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் நாங்கள் அவருக்கு நிறைய உதவினோம். அவர் அதிகார மோகத்தை வளர்த்துக் கொண்டார், அது இப்போது வங்கதேசத்தை எரிக்கிறது.


எங்கள் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கொல்லப்படுகிறார்கள். போலீசார், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள். நான் என் தந்தை, அல்லா என்னைப் பாதுகாத்துக்கொண்டே இருக்கலாம், ஒருவேளை அவர் என் மூலம் ஏதாவது நல்லது செய்ய விரும்பலாம். குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது எனது உறுதிமொழி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement