மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் தர்ணா போராட்டம்

சிதம்பரம் : கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் அனைவருக்கும் சமமான பணியை வழங்க வலியுறுத்தி செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 235 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒருவர் ஆண். இந்நிலையில், செவிலியர்களுக்கு ஷிப்ட் முறைப்படில பகல் மற்றும் இரவு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 40 செவிலியர்கள், உயர் அதிகாரிகளின் சிபாரிசு அடிப்படையில், இரவு பணி வழங்கப்படாமல் இருப்பதும் , மற்றவர்களுக்கு தொடர்ந்து இரவு பணி வழங்குவதாகவும் புகார் எழுந்தது. இதனால் தொடர்ந்து இரவு பணிகள் அதிகம் வருவதாக பல செவிலியர்களுக்கு பகல் நேர பணிகள் மிகவும் குறைவாக உள்ளதாக கூறி வருகின்றனர்.,

இந்நிலையில் நேற்று, செவிலியர்கள் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் இரவு பணிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, அண்ணாமலை பல்கலைக்கழக தலைவர் ஜான் மற்றும் பாண்டியன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியதைடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement