இந்திய நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா தாக்குதலால் பரபரப்பு

கீவ்: ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று, இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியதாக உக்ரைன் கூறியுள்ளது.
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று, இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது தெரியவந்து உள்ளது.
இது தொடர்பாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை , ரஷ்யா ஏவுகணை ஒன்று தாக்கியது. இந்தியாவின் நட்பு நாடு எனக்கூறும் ரஷ்யா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
உக்ரைனுக்கான பிரிட்டன் தூதர் மார்ட்டின் ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில்,'' கீவ் நகரில் உள்ள மருந்து நிறுவனத்தின் குடோனில் ரஷ்யாவின் ஆயுதம் தாக்கியது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தேவைப்படும் மருந்து அழிந்தது. உக்ரைனின் சாமானிய மக்களுக்கு எதிரான ரஷ்யாவின் பயங்கரவாதம் தொடர்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
