3 நாட்கள் விடுமுறை; 3.32 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்

சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து 3 நாட்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் பயணித்துள்ளனர்.



இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு;


தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.04.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில் 2,092 பஸ்களும் 1,153 சிறப்புப் பஸ்களும் ஆக 3,245 பஸ்களில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர்.


11.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய பஸ்கள் 2,092 மற்றும் 712 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர்.


ஆக கடந்த 11.04.2025 முதல் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 மணி வரை 6,049 பஸ்களில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர்.


இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement