ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 பேர் பலி

விஜயவாடா: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச்சிதறின.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு உள்ளார்.
பிரதமர் இரங்கல்
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனக்காப்பள்ளி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.


மேலும்
-
ரூ.13,000 கோடி மோசடி செய்த சோக்சி சிக்கினார்! பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர்
-
கேரளா வக்கீலுக்கு புகழாரம்
-
அக் ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க நகை கடைகளில் புதிய முறை அறிமுகம்
-
'ஜில்' பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை
-
நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர்; அமைச்சர் கோவி.செழியன் பதிலடி
-
'மோடியை மறக்க மாட்டோம்'