இ-நாம் முறையில் கொப்பரை ஏலம்ரூ.5.42 லட்சத்திற்கு விற்பனை
இ-நாம் முறையில் கொப்பரை ஏலம்ரூ.5.42 லட்சத்திற்கு விற்பனை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்தில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ, 176.99 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 87.99 ரூபாய்க்கும், சராசரி விலையாக, 151.09 ரூபாய்க்கும் விற்பனையானது. இதில், 3,371 கிலோ கொப்பரை தேங்காய்கள், 5.42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள் வேந்தன் கூறுகையில், ''இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தை முறையில் (இ-நாம்), விவசாய விளைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால் விவசாயிகளின் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. விற்பனை தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. விவசாயிகள், கொப்பரை, பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து, கூடுதல் வருவாய் பெறலாம். மேலும், நடப்பு பருவத்தில், நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடக்க உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நெல்லை நல்ல விலைக்கு
வர்த்தகம் செய்யலாம்,'' என்றார்.