லாட்டரி டிக்்கெட் விற்றவர் கைது


லாட்டரி டிக்்கெட் விற்றவர் கைது


அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.பி.ஐ., வங்கி அருகே முருகேசன் என்பவரது பழக்கடையில், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமராஜ், 52, என்பவர் சட்டவிரோதமாக ஆன்லைனில் இருந்து, பதிவேற்றம் செய்து லாட்டரி டிக்கெட்டுகளை வெள்ளை காகிதத்தில் எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 20 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement