ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்
பரமக்குடி: தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியா முழுவதும் விண்ணப்பித்த 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாஜகான், பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணத்திற்கு இந்தியா முழுவதும் 52 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்தது. இதற்கான கட்டணத்தை வசூலித்து ஹஜ் ஏஜன்சிகள் மத்திய ஹஜ் கமிட்டிக்கு செலுத்தியுள்ளனர். மார்ச் 25க்குள் தொகையை சவுதி அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால் மத்திய ஹஜ் கமிட்டி செலுத்தவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி அரசிடம் பேசி 52 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
Advertisement
Advertisement