திருநங்கையருக்கு 2 தங்கும் இல்லம் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை:''சென்னையில் திருநங்கையருக்கு, இரண்டு தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் பள்ளிகளில் செயல்படும், 43,131 சத்துணவு மையங்களில், 42.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். தாளிதம், காய்கறிகளுக்காக வழங்கப்படும் தொகை, முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 1.79 ரூபாய் என்பது 2.01 ரூபாயாகவும்; ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2.11 ரூபாயானது, 2.71 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு, 61 கோடியே 61 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்
திருநங்கையருக்கு சென்னையில், 'அரண்' என்ற பெயரில், 64 லட்சம் ரூபாயில், இரண்டு தங்கும் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அமைக்கப்படும். இந்த இல்லத்தில், 25 திருநங்கையர் தங்க வசதிகள் ஏற்படுத்தப்படும்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2,000 பெண்களுக்கு, உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும், வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க, 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, 1 கோடி ரூபாயில், 20 கருத்தரங்குகள் நடத்தப்படும்
குழந்தைகள் மையத்திற்கு வரும், 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின், முன்பருவ கல்வி கற்றல் திறனை மதிப்பீடு செய்து, பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்த, 'செயலி' உருவாக்கப்படும். இதை பயன்படுத்துவது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 1 கோடி ரூபாயில் பயிற்சி அளிக்கப்படும்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் குறித்த செயல்பாடுகளை, மக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் ஐ.வி.ஆர்.எஸ்., தொழில்நுட்ப வசதி 1.50 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்
பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்க, தவறான பாலுாட்டும் முறைகளால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களை தடுக்க, கர்ப்பிணியர் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்களும், 9.16 கோடி ரூபாயில் டிஜிட்டல் மயமாக்கப்படும்
கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், கடத்துார் தாலுகாக்களில், 1.53 கோடி ரூபாயில் புதிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்
மயிலாடுதுறை மாவட்டத்தில், 46 லட்சம் ரூபாயில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அமைக்கப்படும். சென்னை மாவட்ட திட்ட அலுவலகம், வட சென்னை, தென்சென்னை என, இரண்டாக பிரிக்கப்படும்
குழந்தைகள் நலனை காப்பதில், திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு, 'முன்மாதிரியான சேவை விருது' 4 லட்சம் ரூபாயில் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு