மாடியில் இருந்து விழுந்த தம்பதி உயிரிழப்பு
நாகர்கோவில்:கன்னியாகுமரி தனியார் லாட்ஜின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து குஜராத்தை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம், அம்ரேலியை சேர்ந்த, 30 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற பின், கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கியிருந்தனர்.
நேற்று அதிகாலை, இந்த குழுவில் வந்த அனைவரும் சூரிய உதயம் பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.
ஆனால், இவர்களில் பபாரியா ஹரிலால் லால்ஜி, 78, அவரது மனைவி பபாரியா ஹன் சப ஹேன் ஹரிலால், 64, துாக்கம் வருவதாக கூறி அறையிலேயே இருந்தனர்.
பின்னர், சூரிய உதயம் பார்க்க செல்லலாம் என முடிவெடுத்த தம்பதி, அறை சாவி இல்லாததால், மாடி அறையின் பின்பக்க ஜன்னல் வழியாக கடந்து, பின்புற பாதைக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதில், இருவரும் தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர். கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு