செயல் விளக்க முகாம்

ரெட்டியார்சத்திரம்: செம்பட்டி ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இணை பேராசிரியர் புனிதவதி தலைமையில் தாதன்கோட்டை கிராமத்தில் தென்னை சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடத்தினர். மாணவியர் சி.அபிநயா, மு.அபிநயா, அப்ரின்பானு, ஆன்டோஜெயபிரியா, அனுபிரபா, தனஸ்ரீ செயல் விளக்கம் அளித்தனர்

Advertisement