சலுகை பிரியாணியால் 'டிராபிக்'
பள்ளிப்பாளையம்:புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில், சலுகை விலையில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. மக்கள் வாங்க திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பிரிவு சாலை பகுதியில் புதிதாக, நேற்று பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, ஒரு பிரியாணி வாங்கினால், ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என,
அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று மதியம், 1:00 மணிக்கு ஏராளமான மக்கள் பிரியாணி வாங்க திரண்டனர். மேலும், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தியதால், போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். பின், கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதனால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
Advertisement
Advertisement