டூவீலரில் ரூ.4 லட்சம் திருட்டு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார், சாய்பாபாபா தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 39. பாகலுார், ஏ.பி., கேட் அருகே செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று காலை, பாகலுார் அருகே, வெலத்துார் சர்க்கிளில் உள்ள ஒரு வங்கியில், தன் கணக்கிலிருந்து, 4 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். அதை, தன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சீட்டின் அடியில் வைத்துள்ளார்.
காலை 11:00 மணியளவில், பாகலுார் போலீஸ் ஸ்டேஷனை அடுத்துள்ள பேக் கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, பேக் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், சுரேஷ் ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து உள்ளேயிருந்த, 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.
இக்காட்சி அருகிலிருந்த, 'சிசிடிவி'யில் பதிவானது. சுரேஷ் புகார் படி, பாகலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
Advertisement
Advertisement