இ.சி.ஆரில் பைக் மோதி பெண் பலி
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டைச் சேர்ந்தவர் சுந்தரி, 57. இவர் நேற்று காலை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க, அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, டி.வி.எஸ்., ேஷாரூம் எதிரே இ.சி.ஆரை சுந்தரி கடக்க முயன்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.
இதில், படுகாயமடைந்த சுந்தரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து சுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
Advertisement
Advertisement