ஒரே ஆம்புலன்சில் கர்ப்பிணிகள், கைகுழந்தைகள் செல்லும் அவலம் சமூக வலைதளத்தில் வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் உட்பட சில பரிசோதனை கருவிகள் செயல்படாததால், மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி மற்றும் கைகுழந்தைகளை ஒரே ஆம்புலன்சில் ஏற்றி பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

இதனை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement