சித்தப்பாவிற்கு மிரட்டல் 2 பெண்கள் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சித்தப்பாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த, இரு பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் காலனியை சேர்ந்தவர் வேலு,51; இவருடைய அண்ணன் மகள்களான, வெங்கலத்தை சேர்ந்த கருணாகரன் மனைவி ரேவதி,30; மேலுாரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பிரியதர்ஷனி,27; ஆகியோர் கடந்த, 14 ம் தேதி பகல் 2:30 மணியளவில், அவரது வீட்டு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், இருவரும் வேலுவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
Advertisement
Advertisement