வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நீச்சல் போட்டி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், 17ம் ஆண்டு நீச்சல் போட்டி, பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில், நேற்று, நடந்தது. போட்டியை, கல்விக்குழுமத்தின் பொருளாளர் சுரேஷ்குமார், பள்ளி முதல்வர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தனர்.

இதில், 11 வயது முதல் 17 வயது வரை உள்ள இருபாலர், தனிப்பட்ட போட்டி மற்றும் குழு போட்டி, ஏரோபிக் நடனம், வாட்டர் போலோ போட்டி நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கபட்டது.

Advertisement