வெள்ளை கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்

இடைப்பாடி:கொங்கணாபுரம், மசக்குமாரபாளையத்தில் வீடு கட்ட பயன்படுத்தும் வெள்ளை கற்களுடன், டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நிறுத்த, இடைப்பாடி தாசில்தார் ராஜமாணிக்கம் 'சைகை' காட்டினார்.

அதை ஓட்டி வந்த டிரைவர், சற்று முன்னதாக லாரியை நிறுத்தி, இறங்கி ஓடிவிட்டார். லாரியை கைப்பற்றிய தாசில்தார், கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.

Advertisement