வக்ப் திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ப் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, அரவக்குறிச்சி உரூஸ் மைதானத்தில், கரூர் மாவட்ட தலைவர் முகமது சலீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ கலந்துகொண்டார். இதில், மத்திய அரசை கண்டித்தும், வக்ப் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அரவக்குறிச்சி தி.மு.க., நகர செயலாளர் மணி, மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், சட்டப்பிரிவு மாநில துணைத்தலைவர் முகமது பஜ்லுல் ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement