சந்தையூர் வாரச்சந்தையில்ஆடு, கோழி விற்பனை ஜோர்




கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன், சிவாயம் பஞ்., சந்தையூரில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, ஆடு, கோழி, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. சிவாயம், வயலுார், பாப்பகாப்பட்டி, பஞ்சப்பட்டி, சத்தியமங்களம் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகதள, காலை நேரத்தில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி,

நேற்று நடந்த விற்பனையில், ஏழு கிலோ ஆடு, 6,300 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடு, கோழிகளை வாங்க, கரூர், புலியூர், லாலாப்பேட்டை, குளித்தலை, தோகைமலை, கழுகூர், தேசியமங்களம், சேங்கல் பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். இதனால் வியாபாரம் ஜோராக நடந்தது.

Advertisement