நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது
தாராபுரம்:தாராபுரம், புதுக்கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் நாட்ராயன், 47; இவரது பைக்கை சில நாட்களுக்கு முன் வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் பைக்கை இருவர் தள்ளி செல்வதை பார்த்து கூக்குரல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இருவரும் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பூபாலன், 29; பழனி, கலையமுத்துார் நாகராஜ், 29, என்பது தெரிந்தது. அதே பகுதியில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்கின்றனர். மது போதையில் பைக்கை திருடி சென்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement