கல்லுாரிக்கு 'இ கற்றல்' அங்கீகாரம்
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு இஸ்ரோவின்'அவுட்-ரீச்' இ -கற்றல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். முதன்மையர் ராபின்சன், துறைத்தலைவர் (இசிஇ) கே.ஸ்ரீனிவாசன், திட்ட சிறப்பம்சங்களை விளக்கினார்.
கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து, இஸ்ரோவின்'இ -கற்றல்' பாடத்தொகுப்பினை கற்று பூர்த்தி செய்தனர். மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் அதற்கான சான்றிதழ்களை இஸ்ரோ வழங்கியது.
இக்கல்லூரியை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) 'இ -கற்றல்' முறைக்கு திட்ட ஒருங்கிணைப்பாளராக அங்கீகரித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement