மாதவராயன்பட்டியில் மீன்பிடித் திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் மாதவராயன்பட்டி கண்மாயில் நடந்த மீன் பிடித்திருவிழாவில் கிராமத்தினர் பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனர்.
கோடை துவங்கி, கொளுத்தும் வெயிலில் கண்மாய்களில் நீர் வற்றத் துவங்கியதை அடுத்து திருப்புத்துார் ஒன்றிய கிராமக் கண்மாய்களில் கிராமத்தினர் மீன்பிடித் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாதவராயன்பட்டி கண்மாயில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த கிராமத்தினர் பங்கேற்றனர்.
கிராம தெய்வ வழிபாடு நடத்தி விட்டு காலை 9:00 மணிக்கு மீன்பிடித் திருவிழா துவங்கியது. ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை ஆகிய மீன்படி உபகரணங்களை கொண்டு கிராமத்தினர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement