பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: திருக்கனுார் பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் சர்வதேச சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

அரவிந்த் கல்விக் குழுமத்தின் சேர்மன் அருண்குமார் தலைமை தாங்கினார். பிரைனி ப்ளூம்ஸ் பள்ளியின் துணை சேர்மன் திவ்யா முன்னிலை வகித்தார். அரவிந்தர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் காந்திமதி நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார்.

தலைமை விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துறை பேராசிரியர் இளையராஜா, ஆகியோர் பங்கேற்று பேசினர். விழாவில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement