மயங்கிய பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை

பொள்ளாச்சி : அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் முகில் துலாம், 27. இவர், பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பொக்லைன் இயந்திர ஆபரேட்டராகவும் உள்ளார்.

அவரது மனைவி சிவரஞ்சினி அருகே உள்ள மளிகைக்கடையில் பணிக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல கடைக்கு சென்ற அவரது மனைவி, திடீரென மயங்கி விழுந்ததாக, கடை உரிமையாளர் முகில்துலாமிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர், தனது மனைவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement