மரங்களை வெட்டி கடத்த முயற்சி: லாரி பறிமுதல்
குளித்தலை: குளித்தலை அடுத்த தளிஞ்சி கிராம சாலையில், அரசுக்கு சொந்தமான புளியமரம், வேப்பமரம் ஆகியவற்றை அரசு அனுமதியின்றி வெட்டி, லாரியில் ஏற்றி கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ., விஜயேந்திரனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் வி.ஏ.ஓ., விஜயேந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், வெட்டிய மரங்களை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அங்கு, வி.ஏ.ஓ., வருவதை பார்த்த நபர்கள், தப்பி ஓடினர். இதையடுத்து, மரங்களை கடத்த பயன்படுத்திய லாரி, வெட்டிய மரங்களை கைப்பற்றி, நங்கவரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
Advertisement
Advertisement