கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதில், பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 450 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகம் வாங்கி சென்றனர்.

Advertisement