வருவாய் கோட்டங்களில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் இன்று, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களை வருவாய் கோட்ட அளவில் நடத்த கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், சப்- கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், இன்று 10:30 மணிக்கு நடக்கிறது.

இதேபோன்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

இதேபோல், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

Advertisement