வாகனங்கள் மோதல்: 9 வயது சிறுமி பலி
ராணிப்பேட்டை : வாலாஜா அருகே வாணிச்சத்திரத்தில், லாரி, ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என, நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், ஆட்டோவில் வந்த 9 வயது சிறுமி பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வேலுாரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற லாரி, திடீரென பிரேக் அடித்து நின்றது.
இதில், பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என அடுத்தடுத்து, நான்கு வாகனங்கள் மோதின.
இதில், ஆட்டோவில் குடும்பத்துடன் பயணித்த, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின், 9 வயது மகள் நிஜிதா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
Advertisement
Advertisement