மாணவர்களுக்கு விருந்து; பள்ளி ஆசிரியர் தாராளம்

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 98 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
கல்வியாண்டின் இறுதி வேலை நாளான கடந்த 17ல், பள்ளியின் ஆசிரியர் தெய்வநாயகம், மாணவ - மாணவியருக்கு விருந்து மற்றும் பரிசுகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
வாழை இலையில் வெஜிடபிள் பிரியாணி, கேசரி, பழங்கள் வைத்து விருந்து கொடுத்தார். பள்ளியில் மாணவ - மாணவியர் மகிழ்வுடன் சாப்பிட்டனர். அடுத்த ஆண்டு, ஆறாம் வகுப்பு செல்ல இருக்கும், ஐந்தாம் வகுப்பை சேர்ந்த 28 மாணவ - மாணவியருக்கு பேனா, பென்சில், தேர்வு அட்டை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.
இதுகுறித்து, ஆசிரியர் தெய்வநாயகம் கூறுகையில், “தொடக்கப் பள்ளியில் இருந்து மனநிறைவுடன் மாணவ - மாணவியர் வீட்டிற்கு செல்வதற்கு, பள்ளியின் சீதனமாக பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வியை தொடர்ந்து கற்க, ஊக்கம் அளிக்கும் விதமாக விருந்து மற்றும் பரிசு வழங்கப்பட்டன. இது போல, 17 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்றார்.

மேலும்
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு