ஸ்கூட்டரில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு

எம்.கே.பி.நகர்,மணலி, பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், எம்.கே.பி.நகர், மேற்கு அவென்யூ சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 1.21 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதற்காக, நேற்று 'ேஹாண்டா டியோ' ஸ்கூட்டரில் சென்றார்.

முதலில் 21,000 ரூபாய் டெபாசிட் செய்வதற்காக எடுத்து சென்றார். மீதி 1 லட்ச ரூபாய் ஸ்கூட்டர் அறையில் வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement