மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ஆர்.டி.ஐ., வாயிலாக விபரம்
சென்னை, மத்திய பட்ஜெட்டில், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 8,445 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள விபரம், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.
சென்னையில் மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்துக்கு 63,246 கோடி ரூபாயில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதா; இல்லையா என்ற விபரங்கள், வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர், தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் வாயிலாக, நிதி ஒதுக்கீடு விபரம் தெரிய வந்துள்ளது.
சமீபத்தியமத்திய பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, 8,445 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், டில்லி - 5,434 கோடி ரூபாய், பாட்னா - 3,165 கோடி ரூபாய், பெங்களூரு - 2,217 கோடி ரூபாய், மெட்ரோ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், மும்பை உட்பட நான்கு நகரங்களில் நடக்கும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக, 4,836 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.