மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

எம்.கே.பி.நகர், ஏப். 29-

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி



சென்னை, எருக்கஞ்சேரி, கென்னடி நகரை சேர்ந்தவர் குமார், 44. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக, 45வது வார்டில் குப்பை சேகரிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை 5:00 மணியளவில், வியாசர்பாடி, பி.வி.காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான பம்பிங் ஸ்டேஷனில் கை, கால்கள் கழுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement