நாளை கூடுதல் டோக்கன் பதிவுத்துறை தகவல்

சென்னை : 'முகூர்த்த நாளான நாளை சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, பொது மக்கள் விரும்புகின்றனர். இதனால், முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில், பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என்று தெரிகிறது.

எனவே, சித்திரை மாத கடைசி முகூர்த்த நாளான நாளை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தினசரி, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 150 டோக்கன்கள்; வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement