ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதி மூவருக்கு கால் முறிவு


காங்கேயம்::

காங்கேயம் அருகேயுள்ள நத்தகாடையூரை சேர்ந்தவர்கள் சந்தோஷ், 25, சுபாஷ், 27, விவேக், 22; மூவரும் காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

நத்தகாடையூர்-பழையகோட்டை சாலையில் சென்றபோது, ஈரோடு சாலையில் எதிரே வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீது பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த மூன்று பேருக்கும் கால் முறிந்தது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement