கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நுாலகர் கலியமூர்த்தி வரவேற்றார். தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் துணை சபாநாயகர் ராஜவேலு, பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் குருநாதன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சக்திவேலன், எழில்வேந்தன், வெங்கடேசன், புஷ்பராஜ், வரதராஜன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை பள்ளி நுாலகர் கலியமூர்த்தி செய்திருந்தார். விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement