நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி

பேரையூர்; மதுரை பைக்காராவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 38. எலக்ட்ரீஷியன். இவர் மனைவி ஈஸ்வரி பிறந்த ஊரான பேரையூர் தாலுகா சின்னகட்டளை கிராமத்திற்கு சித்திரை திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்தார்.

சேடபட்டி ஊருணிக்கு குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி இறந்தார். எஸ்.ஐ காசிராஜா விசாரிக்கிறார்.

Advertisement