பத்ரகாளியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் வடக்கூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. ஏப்.,22ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நேற்று காமராஜர் பள்ளி அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்றனர்.

பின் அம்மனுக்கு பால் உட்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. மாலை பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வடக்கூர், அரசு மருத்துவமனைத் தெரு உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement