நாகர்கோவில் - - காச்சிகுடா ரயில் ஜூன் வரை நீட்டிப்பு
விருதுநகர்:கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களை ஜூன் வரை நீட்டிப்பு செய்து தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
வெள்ளி தோறும் இரவு 7:45 மணிக்கு காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (07435) ஜூன் 6 வரை, மறுமார்க்கம் ஞாயிறு தோறும் அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(திங்கள்) காலை 6:30 மணிக்கு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரயில் (07436) ஜூன் 8 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
இரு ரயில்களும் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக செல்லும். இவற்றுக்கான முன்பதிவு துவங்கியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து எதிரொலி: வறண்டு கிடக்கின்றன பாக்., அணை
-
தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிமென்ட் கல் தயாரிப்பு - வெளியேறும் துாசியால் சிரமம்
-
சாக்கலூத்துமெட்டு ரோடு அமைக்க கோரி இன்று எம்.பி. தலைமையில் நடை பயணம்
-
ரெட்டிச்சாவடி அருகே 2 வீடுகளில் நகை, பணம் துணிகர திருட்டு
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
Advertisement
Advertisement