6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

அடையாறு,
அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை, தஞ்சாவூர், திருச்சி பகுதிகளுக்கு விற்பனை செய்வதாக, அடையாறு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வட மாநிலத்திலிருந்து சென்னைக்கு, நேற்று வந்த ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷத் அலி, 22, சுல் ஜுமான், 23, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement