மருத்துவமனையில் அபாய குடியிருப்பு கட்டடங்கள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழுதடைந்த பணியாளர் குடியிருப்புகள், குடிநீர் தொட்டி கட்டடங்களால் விபத்து அபாயம் உள்ளது.
1960களில் இருந்து செயல்படும் இம்மருத்துவமனையில் பணியாளர்களுக்கான 8 குடியிருப்புகள் 1980ல் கட்டப்பட்டது. அதில் இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்றவை பராமரிப்பின்றி சேதமடைந்து விட்டது. புற நோயாளிகள் பிரிவு நுழைவுப் பகுதியில் உள்ள பழுதடைந்த கட்டடத்தின் மேல் மாடித்தோட்டம் போல் அரச மரங்கள் 10 அடிக்கு மேல் வளர்ந்துள்ளன.
இதன் அருகே தான் மருந்து வாங்குவதற்கு நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
கழிப்பறை கட்டடத்தின் மீதும் மரங்கள் வளர்ந்துள்ளன. அபாய கட்டடங்களை அகற்றி புதிய குடியிருப்புகள் கட்ட மருத்துவத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடங்கியது அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
-
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் மன்னர்களாக உருவாகினர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? சூசக பதில் அளித்த நயினார்
-
ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement