காஷ்மீர் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்

புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., சதி (பாக்., உளவு அமைப்பு) மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது. தேசிய புலனாய்வு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை தொடர்பாக தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும் பின்புலத்தில் இருந்து உதவி புரிந்துள்ளது.
இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தலைமையகத்தில் சதி திட்டமிடப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (POK) சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர்வாசிகள் உதவி
பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானிடமிருந்து வழிகாட்டுதலையும் நிதியையும் பெற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாக்., ஆக்கிரமிப்பு கார்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். முக்கிய பயங்கரவாதிகள் ஹாஷிம் மூசா மற்றும் அலி என்கிற தல்ஹா பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள். இருவருக்கும் காஷ்மீரில் வசிக்கும் அடில் அஹம்மது தோகர் என்பவர் உதவியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தளவாடம் வழங்குதல், தகவல், திரட்டி கொடுத்தல், உள்ளூர் பகுதிகள் குறித்த அடையாளம் தெரிவித்தல் மற்றும் பதுங்கு இடங்கள் உள்ளிட்டவற்றை உள்ளூர்வாசிகள்தான் வழங்கியுள்ளனர்.
மேலும் தாக்குதல் நடப்பதற்கு முன் ஒரு வாரம் முன்னதாக இந்த பகுதிக்கு அவர்கள் வந்துள்ளனர். பஹல்காம் பகுதியில் 2 நாட்கள் நோட்டமிட்டுள்ளனர்.
பஹல்காமில் 2,800 பேரிடம் நடத்திய விசாரணையில் 150க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல மதவாத அமைப்பினர் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உதவியவர் களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைககள் துவங்கியுள்ளது. பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் உட்பட தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன. இது தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குப்வாரா, புல்வாமா, சோப்பூர், அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களின் வீடுகள் சோதனை செய்யப்பட்டன.
1999ம் ஆண்டு ஐசி-814 விமானக் கடத்தல் வழக்கில் முக்கிய நபராகவும், தற்போது பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் முஷ்டாக் அகமது ஷர்கரின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள ஷர்கரின் வீடு 2023ம் ஆண்டில் சட்டவிரோத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் சீல் வைக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு படை இயக்குநர் ஜெனரல் (DG) தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஆதாரங்களை வழங்கப்படும். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.












மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த 'மாஜி' வி.சி., நிர்வாகிக்கு 'காப்பு'
-
குப்பையில் வீசப்பட்ட தபால்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு
-
கள்ளக்காதலியின் மகளுக்காக இரண்டு கொலை செய்த முதியவர்
-
மொபட் மீது பஸ் மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி
-
பெண் அமைச்சருக்கு அலைபேசியில் தொல்லை: கல்லூரி மாணவர் கைது
-
இலங்கையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை மீட்பதில் ஆர்வமில்லை