அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்த வாலிபர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அனுமதியின்றி 2 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை விரியூர் ஏரிக்கரை பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது, இரு நாட்டு துப்பாக்கிகளுடன் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரைணயில் அவர் அதே ஊரை சேர்ந்த சூசைநாதன் மகன் அந்தோணிராஜ்,28; என்பதும், காப்பு காடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரிந்தது.
அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தும் 50 கிராம் கருப்பு வெடிமருந்து மற்றும் 50 கிராம் பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
Advertisement
Advertisement