5 பல்சர் பைக்குகள் திருட்டு: வாலிபர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பல்சர் பைக்குகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று குளத்துார் கூட்ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீஸ் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் விரியூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான் கென்னடி,28; என தெரிய வந்தது. மேலும், சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில், 5 பல்சர் பைக்குகளை திருடியது கண்டறியப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
Advertisement
Advertisement