பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்: போலீஸ் விசாரணை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பிறந்து, பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலய தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி,50; என்பவர் சென்றார்.
அப்போது அவரிடம், 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பிறந்து சில தினங்களே ஆன, ஆண் குழந்தையை சிறிது நேரம் வைத்திருக்குமாறும், கழிவறைக்கு சென்று வருவதாகவும் கூறி, குழந்தையை கொடுத்து விட்டு சென்றார்.
இதையடுத்து, 5 மணி நேரத்திற்கு மேலாகியும் அந்த பெண் குழந்தையை பெற மீண்டும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பத்மாவதி, விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களிடம், குழந்தை விவகாரத்தை கூறினார்.
அவர்கள் அந்த குழந்தையை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில், ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தை கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!