அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்ட அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் உமாராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மல்லிகா, சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 125 மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

நீண்ட காலம் பணி செய்யும் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 15க்குமேற்பட்ட குழந்தைகள் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்டிப்பாக ஒரு பணியாளர், உதவியாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement