4 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (மே 05), நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரி, அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி, கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (மே 04) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (மே 05), நாளை மறுநாளும் (மே 06) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று 4ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (2)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
04 மே,2025 - 16:44 Report Abuse

0
0
Reply
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன் - ,இந்தியா
04 மே,2025 - 15:34 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இந்தியாவை வென்றது இலங்கை: பெண்கள் ஒருநாள் போட்டியில்
-
அரசு தேர்வில் தோல்வியுற்ற மகன்; ஆச்சர்யம் அளித்த பெற்றோர் செயல்!
-
அன்குர், அபினாத் ஜோடி தங்கம்: 'யூத்' டேபிள் டென்னிசில்
-
பெண்கள் ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி
-
பார்வ் சவுத்ரி 'வெண்கலம்': உலக 'யூத்' பளுதுாக்குதலில்
-
ராணுவ அணி வீரருக்கு தங்கம்: துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
Advertisement
Advertisement